Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 13 மே, 2024

Tamil Catholic Song Lyrics - மாசில்லாக் கன்னியே

மாசில்லாக் கன்னியே

1. மாசில்லாக் கன்னியே மாதாவே
உம்மேல் நேசமில்லாதவர் நீசரேயாவார் 

வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே

2. மூதாதையர் செய்தீ முற்பவமுற்றாய்
ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்      -    வாழ்க வாழ்க

3. உம்மகன் தாமே உயிர்விடும் வேளை
என்னை உம்மைந்தனாய் ஈந்தனரன்றோ   -    வாழ்க வாழ்க

4. தாயே நீஆனதால் தாபரித்தென்மேல்
நேசம்வைத்தாள்வது நின்கடனாமே               -    வாழ்க வாழ்க

5. பிள்ளைகள் செய்பிழை பெற்றவள் தாங்கிக்
கொள்ளுவாளன்றி பின் கோபம் வையாளே    -  வாழ்க வாழ்க



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


Tamil Catholic Songs lyrics - தேவ ஸ்துதிகள் (During Benediction)

 தேவ ஸ்துதிகள்




சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!

அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக!

மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதனுமான சேசு கிறீஸ்துநாதர் ஸ்துதிக்கப்படுவாராக!

சேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய விலைமதியாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக!

பீடத்தின் மிகவும் பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் சேசுநாதர் ஸ்துதிக்கப்படுவாராக!

தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்து ஸ்துதிக்கப்படுவாராக!

சர்வேசுரனுடைய தாயாராகிய அதிபரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக!

அவருடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக!

கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம்

ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக!

தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் அர்ச்சியசிஷ்டவர்க ளிடத்திலும் சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 31 - அர்ச். இராபர்ட் பெல்லார்மின் (St. Robert Bellarmine)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 

🇻🇦மே 1️⃣3️⃣ம் தேதி

🌹வேதபாரகரும் கர்தினாலுமான அர்ச். இராபர்ட் பெல்லார்மின் திருநாள்🌹


Feast day          13 May (General Roman Calendar, 1932–1969)

Venerated in   Catholic Church

Title as Saint   Confessor and Doctor of the Church

Beatified           13 May 1923 Rome, Kingdom of Italy by Pius XI

Canonized       29 June 1930 Rome, Vatican City by Pius XI



🌹இவர் இத்தாலியின் டஸ்கனி யிலுள்ள மோந்தெபுல்சியானோவில் , 1542ம் வருடம் பிறந்தார்; இவருடைய தாயார், சினிசியா செர்வினி என்பவர், 2ம் மர்செல்லுஸ் பாப்பரசரின் சகோதரியாவார்.

இவர் சிறுவனாயிருந்தபோது, இத்தாலி யிலும், இலத்தீனிலும் அநேகக் கவிதை கள் எழுதினார்; இவர் எழுதிய பாடல் களில் ஒன்று, அர்ச். மரிய மதலேனம் மாள் பற்றிய பாடல், இது உரோமன் கட்டளை ஜெபப்புத்தகத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது.

இவர் சேசுசபை மடத்தில் 18வது வயதில் சேர்ந்தார்; 28வது வயதில், 1570ம் வருடம், குருப்பட்டம் பெற்றார்; புராட்டஸ்டன்டு பதிதர்களின் தாக்குதல் களுக்கு ஏற்ப திருச்சபையின் வேத சத்தியங்களின் விளக்க நூல்களை முறைப்படி தயாரித்து பரப்பினார்;  மிக நெருக்கமாகச் சென்று, புராட்டஸ்டன்டு பதிதங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வை நடத்தினார்; 1592ம் வருடம்,இவர், உரோமன் கல்லூரியின் அதிபரானார்; 1598ம் வருடம், மேற்றிராணிமார்களின் பரிசோதகரானார்; 1599ம் வருடம் கர்தினாலானார். உடனே, 8ம் கிளமென்ட் பாப்பரசர், இவரை தலைமை நீதி விசாரணையாளராக நியமித்தார்; ஜியோடானோ புரூனோ என்ற பதிதனை, அவன் கடைசி வரை பதிதத்தப்பறையிலேயே மூர்க்கனாய் நிலைத் திருந்ததால்,  நெருப்பில் எரிக்கும்படியான தீர்ப்பிற்கு இவர் ஒப்புதல் அளித்தார்; 

1616ம் வருடம், 5ம் சின்னப்பரின் கட்டளைகளின்பேரில், அர்ச். ராபர்ட் பெல்லார்மின், கலிலேயோவை, கோபர்நிகன் தப்பறையைக் கைவிடும்படி கூறினார்; கலிலேயோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். 

இராபர்ட் பெல்லார்மின் தனது முதிர்ந்த வயதில், மோந்தேபுல்சியானோ வில் மேற்றிராணியாராக நான்குவருட காலம் அலுவல்புரிந்தார்; அதன்பின், உரோமையிலுள்ள அர்ச்.பெலவேந்திரர் சேசு சபைக் கல்லூரியில் இளைப்பாறி ஓய்வெடுக்கும்படி  தங்கியிருந்தார்; இங்கு, 1621ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதியன்று, 78வது வயதில், அர்ச்.இராபர்ட் பெல்லார்மின் பாக்கியமாய் மரித்தார்.🌹✝


🌹அர்ச்.இராபர்ட் பெல்லார்மினே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹


To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here


வெள்ளி, 10 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 30 - அர்ச். அந்தோனினுஸ் (St. Anthonius of Florence)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

 மே 1️⃣0️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச். அந்தோனினுஸ் திருநாள்.🌹



🌹அந்தோனியோ பியரோசி என்பது இவருடைய இயற்பெயர்; இவர் 1389ம் வருடம்  மார்ச் 1ம் தேதியன்று, சுதந்திர குடியரசு நாடான இத்தாலியின் தலைநகரான ஃபுளாரன்ஸில் பிறந்தார்.   இவருடைய 16வது வயதில், 1405ம் வருடம், அர்ச்.சாமிநாதரின் போதகத் துறவற சபையில் சேர்ந்தார். வேத கல்வியும் தத்துவ இயலும் கற்று குருப்பட்டம் பெற்றார்; விரைவிலேயே, அர்ச்.சாமிநாத சபை மடங்களின் நிர்வாக அதிகாரியாக பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டார்; கொர்தோனோ, உரோமாபுரி, நேப்பிள்ஸ் ,ஃபுளாரன்ஸ் ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டார். வேத இயலில் இவர் சிறந்த அறிவுத் திறனைப் பெற்றிருந்ததால், வேத இயல் வல்லுனராக புகழடைந்திருந்தார்; கி.பி.1439ம் வருடம், ஃபுளாரன்ஸ் நகரில் நடைபெற்ற திருச்சபைச் சங்கத்தில்,  பாப்பரசரின் வேத இயல்  ஆலோசகராகவும் இவர் செயல்பட்டார்.

இவர் சிறந்த எழுத்தாளர்: நல்லொழுக்கத்தின் வேத இயல் பற்றிய அநேக நூல்களை எழுதியுள்ளார்;திருச்சபைச் சட்டத்தைப் பற்றிய புத்தகம், பாவசங்கீர்த்தனத்தினுடைய ஆன்ம குருக்களுக்கான வழிகாட்டி, உலக சரித்திரத்தினுடைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு நூல், ஆகியவற்றை எழுதியுள்ளார். எல்லோருக்கும் நல்ல ஆலோசகராக இவர் மிகவும் பிரபலமடைந்தார்; எல்லோராலும், “நல்ல ஆலோசனைகளின் சம்மனசானவர்” என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

பதவியை ஏற்கவில்லையென்றால் திருச்சபை விலக்கம் செய்யப்படுவீர் என்று எச்சரிக்கப்பட்டபிறகு, 4ம் யூஜின் பாப்பரசரின் வற்புறுத்தலின் பேரில்,இவர் ஃபுளாரன்ஸ் நகர மேற்றிராணியாராக ,மார்ச் 13ம் தேதி, 1446ம் வருடம், ஃபியசோல் என்ற நகரிலிருந்த அர்ச்.சாமிநாத சபை மடத்தில், அபிஷேகம் செய்யப்பட்டார்.

இவர் தனது மேற்றிராசனத்தில் சகலராலும் அதிகமாக மதிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டார்; குறிப்பாக, ஜெபிப்பதில் எல்லோருக்கும் நன்மாதிரிகையாகத் திகழ்ந்தார்; ஜெபிக்கும் மனிதராக , ஜெபத்தினுடைய மனிதராக, எப்போதும், ஜெபிப்பதில் ஆழ்ந்திருக்கும் ஒரு அர்ச்சிஷ்ட மேற்றிராணியாராக அர்ச்.அந்தோனினுஸ் திகழ்ந்தார். 1448  மற்றும் 1453ம் வருடங்களில், முறையே கொள்ளை நோயும், பூமியதிர்ச்சிகளும் ஏற்பட்டபோது, இரவு பகலாக இவர் தனது மந்தையிலிருக்கும் மக்களுக்கு உணவு உடை இல்லிடம் கொடுத்து உதவுவதில், இரவு பகலாக ஈடுபட்டார்; உணவு உடைகளை, ஒரு கழுதையின் மேல் சுமத்தி, அல்லலுற்ற மக்களைத் தேடிக் கொடுத்து வந்தார்; இம் மாபெரும் பிறர்சிநேக அலுவலில், தனக்கு உதவும்படியாக , இவர் , உதவியாளர்களின் ஒரு குழுவைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.

அர்ச்.அந்தோனினுஸ் 1459ம் வருடம், மே 2ம் தேதியன்று, பாக்கியமாய் மரித்தார்; இவருடைய அடக்கச் சடங்கை 2ம் பத்திநாதர் பாப்பரசர், தானே முன்னின்று நடத்தினார்: மேலும், அர்ச்.அந்தோனினுஸ் மீது கொள்கிற  பக்திமுயற்சிக்கு, இப்பாப்பரசர் விசேஷ ஞான பலன்களை அளித்தார்.

அர்ச்.அந்தோனினுஸ், ஒரு தராசை கையில் பிடித்தபடி, சித்தரிக்கப்பட்டிருக்கிற படம் மிகவும் பிரபலம். இதற்கான பின்னணி நிகழ்வு: ஒரு சமயம், ஃபுளாரன்ஸ் நகரவாசி  ஒருவன், புதுவருட பரிசாக அந்நகரின் அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுசுக்கு ஒரு அழகிய பழக்கூடையை கொண்டு வந்து கொடுத்து, புதுவருட வாழ்த்து கூறி அதிமேற்றிராணியாரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றான்.  அதிமேற்றிராணியார் பதிலுக்கு தனக்கு மிகப் பெரிய வெகுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்தான்; ஆனால்,  “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று கூறி, அதிமேற்றிராணியாரான அர்ச்.அந்தோனினுஸ், அவனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.  இதைக்குறித்து அவன் அதிருப்தியடைந்தவனாக வீடு திரும்பினான். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்ச்.அந்தோனினுஸ், அவனை வரவழைத்து, அவனிடம் அவனுடைய பழக்கூடையை தராசின் ஒரு தட்டிலும், “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கச் சொன்னார்; அவனும் அப்படியேச் செய்தான்; என்ன ஆச்சரியம்! “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று எழுதப்பட்டிருந்த அந்த காகிதம் தான், பழங்கள் நிறைந்த அந்த கூடையை விட அதிகக் கனமுள்ளதாயிருந்ததைக் கண்டு, அவன் ஆச்சரியப்பட்டான்! அவன் நிலையில்லாத உலகத்தனமான வெகுமதியின் பேரில் ஆசை வைத்ததைக் குறித்து வெட்கப்பட்டு, அதிமேற்றிராணியாரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டான். மேலும், அர்ச்சிஷ்ட மேற்றிராணியாரிடமிருந்து “சர்வேசுரன் உனக்கு சம்பாவனை அளிப்பாராக!” என்று பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதம் எவ்வளவு அதிக பாக்கிய நன்மையைப் பெற்றுக் கொடுக்கிறது! என்ற உண்மையையும் அறிந்து கொண்டான்.🌹✝


🌹”சர்வேசுரனுக்கு ஊழியம் புரிவது என்பது, ஆட்சி செலுத்துவதாகும்” 🌹 ✍+அர்ச்.அந்தோனினுஸ்


🌹ஸ்துதியரும் மேற்றிராணியாருமான அர்ச்.அந்தோனினுஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🌹



🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹



To read more Saints Life - Click Here

To read more Tamil Catholic SOngs Lyrics - Click here

To download Catholic Songs - Click Here

வியாழன், 9 மே, 2024

Reverencing Motherhood - SSPX Sermons

My Catholic Faith - Existence of God (Chapter 6.) கடவுளின் இருத்தல்

கடவுளின் இருத்தல்

(என் கத்தோலிக்க விசுவாசம் (My Catholic Faith) என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)



இயற்கையிலிருந்து கடவுளின் இருத்தலை எப்படி அறிந்துகொள்கிறோம்?

1. உலகத்தின் இருத்தல்,

2. பிரபஞ்சம் முழுவதிலும் நிலவும் ஒழுங்கு மற்றும் இணக்க நிலை மற்றும்

3. நம் மனச்சான்றின் சாட்சியம் ஆகியவற்றின் வழியாக, கடவுள் இருக்கிறார் என்று இயற்கையின் வழியாக நாம் அறிந்துகொள்கிறோம்.

உலகத்தின் இருத்தல் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் அது தானாகவே இருத்தலுக்கு வந்திருக்க முடியாது.

1. உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தது. மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள், பூமி, கோள்கள், நட்சத்திரங்கள், ஆகிய அனைவரும், அனைத்தும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தார்கள். மனிதர்களும், மற்றவையும் தாங்களாகவே இருத்தலுக்கு வந்திருக்க முடியாது. அவை தொடக்கமில்லாதவராகிய ஒருவரால் உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு கைக்கடிகாரம் எப்படித் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியாதோ, அவ்வாறே மனிதர்களும், கிரகங்களும் தங்களைத் தாங்களே உண்டாக்கிக் கொண்டிருக்க முடியாது.

விண்வெளி வீரரான கர்ச்சர் என்பவருக்கு, கடவுளின் இருத்தலை மறுத்த ஒரு நண்பன் இருந்தான். ஒரு நாள் அவர்கள் சந்தித்தபோது, இந்த நண்பன் அந்த விண்வெளி வீரரின் இல்லத் தில் ஓர் உலக உருண்டையைக் கண்டான். “இது நன்றாகச் செய்யப்பட்டிருக்கிறது. இதைச் செய்தவர் யார்?” என்று அவன் கேட்க, கர்ச்சர், “ஏன் கேட்கிறாய்? அது தானாகவே உருவானது!" என்று பதிலளித்தார். இதைக் கேட்டு அந்த நண்பன் மனம் விட்டுச் சிரித்தான். உடனே கர்ச்சர், "மிகப் பெரிய கிரகமாகிய பூமி தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வதைவிட, இந்தச் சிறு பூமியுருண்டை தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வது அதிக எளிதாகத்தானே இருந்திருக்கும்?" என்றார். நண்பன் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான்.

2. மணலில் காலடித் தடங்களை நாம் காணும்போது, யாரோ அந்த வழியாக நடந்து சென்றிருக்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்கிறோம். பிரபஞ்சமோ தன்னைப் படைத்த உன்னதரின் காலடித் தடங்களால் நிறைந்திருக்கிறது. அவரது பதிவை நாம் மனிதனின் மனதில், அளவற்றவரின் மீதான அதன் ஆழ்ந்த நாட்டத்தில், கண்டுணர்கிறோம். கடவுள் என்பவர் இல்லை என்றால், மனிதனின் ஆழ்ந்த முயற்சிக்கு எந்தப் பலனுமிருக்காது, அது அபத்தமானதாக இருக்கும்.

பிரபஞ்ச ஒழுங்கும், இசைவும் கடவுள் இருப்பதை நிரூபிக்கின்றன, ஏனெனில் ஓர் உன்னதமான படைப்பாளரும், ஈடிணையற்ற திறமையோடு அதைப் பாதுகாப்பவருமான ஒருவர் இருக்கிறார் என்ற முடிவுக்கு அவை நம்மை இட்டுச் செல்கின்றன.

1.      யுக யுகமாக, வான்கோள்கள் தங்களுக்குக் குறிக்கப்பட்ட வழித்தடங்களில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் ஒளியும், அழகும், உத்தமமான அமைவும், ஒழுங்கும் இருக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் மாறாத சட்டம் ஒன்றால் ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஓர் ஆரஞ்சு விதையை நீ விதைத்தால், அதிலிருந்து ஓர் ஆப்பிள் மரம் வளராது என்பதில் நீ உறுதியாயிருக்கிறாய். தினமும் காலையிலும், கிழக்கிலும் சூரியன் உதிக்கும் என்பதில் நீ உறுதியாயிருக்கிறாய். இரவில், உன் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பொழுது விடியும் என்ற உறுதியோடு, சமாதானத்துடன் உறங்கச் செல்ல உன்னால் முடிகிறது.

2. இந்தப் பிரபஞ்ச ஒழுங்கு தற்செயலாக நிகழ்ந்தது என்றோ, அல்லது கோள்கள் தாங்க ளாகவே தங்கள் பாதையை வகுத்துக்கொண்டு இயங்குகின்றன என்றோ சொல்வது, ஒரு கார் தானாகவே ஊரைச் சுற்றி வருகிறது என்று சொல்வது போல, அடிமுட்டாள்தனமாக இருக்கும்!

வானமண்டலங்கள் சர்வேசுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன; ஆகாய விரிவு அவர் கரங்களின் கிரியைகளைக் காட்டுகிறது" (சங். 18:1). சர்வேசுரன் (பிரபஞ்சத்தின்) புத்தியுள்ள காரணராக இருக்கிறார்.

3. முற்கால (அஞ்)ஞானியான சிசேரோ: "ஆகாய மண்டலங்களை நாம் ஆராயும்போது, அவை அனைத்தும் அளவற்ற திறமையுள்ள ஒரு ஜீவியரால் வழிநடத்தப்படுகின்றன என்று நாம் அறிய வருகிறோம்" என்றார். மாபெரும் வான சாஸ்திரியான நியூட்டன் கடவுளின் திருப்பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் தொப்பியை அகற்றி, தாழ்ந்து வணங்கினார்.

நம்முடைய மனச்சான்றின் சாட்சியம் எப்படிக் கடவுளின் இருத்தலை நிரூபிக்கிறது?

நம்முடைய மனச்சான்றின் மூலம் நாம் தவறானதினின்று சரியானதைப் பிரித்தறிய முடிகிறது.

1. நம் மனச்சான்று சரியானதை அங்கீகரித்து, தவறானதைக் கண்டனம் செய்கிறது. இவ்வாறு, நாம் கீழ்ப்படிய கடமைப்பட்டுள்ள உன்னதரான சட்டமியற்றுபவர் ஒருவர் இருக் கிறார் என்றும், அவர் நாம் செய்யும் நன்மைக்குச் சம்பாவனை அளிப்பார் என்றும், தீயவர்களை அவர் தண்டிப்பார் என்றும் நமக்குள் நாம் ஏற்று அங்கீகரிக்கிறோம்.

2. அக, புற சாட்சியத்தையும் மீறி கடவுளின் இருத்தலைப் பிடிவாதமாக மறுப்போர் நாத்திகர் எனப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் ஆங்காரத்தால் குருடாக்கப் படுகிறார்கள். "அவர்கள் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும், உணராமலுமிருக் கிறார்கள்... நீங்கள் காதாரக் கேட்டும், உணராதிருப்பீர்கள், கண்ணாரக் கண்டும், காணாதிருப்பீர்கள். ஏனெனில் இந்த ஜனம் ஒருவேளை கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், இருதயத்தால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களைக் குணப்படுத்தாமலும் இருக்கும்படியாக அவர்கள் இருதயமுங் கனத்துப்போய், கேட்கிறதில் காது மந்தமுள்ளவர்களாகி, தங்கள் கண்களையும் மூடிக் கொண்டார்கள்" (மத். 13:13-15) என்னும் நம் ஆண்டவரின் வார்த்தைகள் இவர்களுக்குப் பொருந்துகின்றன.

Tamil Catholic Quotes 21 - St. Gregory of Nyssa

 “எல்லா ஞானஸ்நானம் பெற்ற கிறீஸ்துவர்களிடத்திலும் இந்த மூன்று காரியங்களை சர்வேசுரன் கேட்கிறார்: 

1. இருதயத்தில் மிகச் சரியான விசுவாசம்; 
2. நாவில் எப்போதும் உண்மை; 
3. சரீரத்தில் அடக்கவொடுக்கம் 

- ஆகிய மூன்றும்  ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்துவனிடமும் இருக்க வேண்டும்” 

அர்ச்.நசியான்சென் கிரகோரியார்.

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 29 - அர்ச். நசியான்சென் கிரகோரியார் (St. Gregory of Nyssa)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐

மே 0️⃣9️⃣ம் தேதி


🌹வேத பாரகரும், ஸ்துதியரும், மேற்றிராணியாருமான அர்ச். நசியான்சென் கிரகோரியார் திருநாள்🌹


🌹இவர் கி.பி.325ம் வருடம் கப்பதோசியாவில்,   அர்ச்சிஷ்டவர்களின் குடும்பத்தில் பிறந்தார்; அர்ச். நோன்னா இவருடைய தாயார்! அர்ச்.செசாரியுஸ், இவருடைய சகோதரர்! அர்ச்.கொர்கோனியா, இவருடைய சகோதரி!  சிறு வயதில் கிரகோரியாரும்,அவருடைய சகோதரர் செசாரியுசும் அவர்களுடைய மாமா ஆம்ஃபிலோகியோஸிடம் கல்வி பயின்றனர். பின்னர், சொல் இலக்கணத்தையும், தத்துவ இயலையும் கற்றுக் கொள்வதற்காக நசியான்சுஸிற்கும், செசரையாவிற்கும், அலெக்சாண்டிரியாவிற்கும், ஏத்தன்ஸிற்கும் கிரகோரியார் சென்றார். 

ஏத்தென்ஸ் செல்லும் வழியில். கப்பல் ஒரு மூர்க்கமான புயலில் அகப்பட்டது. உடனே, கிரகோரியார், ஆண்டவரிடம் இப்புயலிலிருந்து காப்பாற்றப்பட்டால், தனது ஜீவியத்தை சர்வேசுரனுடைய ஊழியத்திற்காக அர்ப்பணிப்பதாக வாக்களித்து, வேண்டிக் கொண்டார். 

ஏத்தென்ஸில், இவர் தனது சக மாணவரான அர்ச்.பேசிலுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார். அர்ச்.பேசில் செசரையாவைச் சேர்ந்தவர். இன்னொரு சக மாணவனாக ஜுலியன் இருந்தான்; இவன் பின்னாளில் உரோமைச் சக்கரவர்த்தியாகி, வேதவிரோதியானான்; கிறீஸ்துவர்களை உபாதித்துக் கொன்று போட்டான்.

361ம் வருடம்,  கிரகோரி நசியான்சுஸிற்கு திரும்பி வந்தார். விரைவிலேயே குருப்பட்டம் பெற்றார்;இச்சமயம், இவருடைய சக மாணவரான அர்ச்.பேசில், இவருடைய மேற்றிராணியாரானார். அர்ச்.பேசில் , அவருடைய விருப்பத்திற்கு எதிராக மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார்.

அதே சமயம்,ஜுலியன் உரோமைச் சக்கரவர்த்தியாக உயர்த்தப் பட்டிருந்தான்; பகிரங்கமாக கிறீஸ்துவ வேதத்திற்கு எதிரானவன் என்று அவன் தன்னையே பிரகடனம் செய்தான். கிறீஸ்துவ வேதவிசுவாசத்தை மறுதலித்த ஜுலியனுக்கு எதிராக  சிநேகத்தினாலும், பொறுமையாலும் சத்திய வேதமான கிறீஸ்துவ வேதமே, ஜுலியன் போன்ற ஒழுங்கற்ற ஆட்சியாளர்களை மேற்கொண்டு வெற்றிபெரும், என்று அர்ச்.கிரகோரியார், ஒரு கட்டுரையைத் தொகுத்து வெளியிட்டார்; 

அர்ச்.கிரகோரியார் விளக்கிய இவ்வேத இயலின் செயல் முறையானது, சர்வேசுரனுடன் பரம இரகசியவிதமாக ஒன்றிணைந்து ஐக்கியமாகிற ஞான ஜீவியத்தின் உயரிய நிலைமைக்கு இட்டுச் செல்கிற, (Theosis) தெய்வீகமாக்கும் நடைமுறை செயல்முறையினுடைய பகிரங்க வெளிப்பாடாகும்.

வேதவிரோதியான  ஜுலியன் மிகுந்த ஆக்ரோஷத்துடனும் வல்லமையுடனும் அர்ச்.கிரகோரியாரையும், மற்ற கிறீஸ்துவ தலைவர்களையும்  உபத்திரவப்படுத்தத் தீர்மானித்தான்; இருப்பினும், அடுத்த வருடமே, பெர்ஷியர்களுக்கு எதிரான போரில் ஜுலியன் மாண்டு அழிந்துபோனான்.

திருச்சபை, கொடுங்கோலன் ஜுலியனின் சாவிற்குப் பிறகு வளம் பெற்றது; அடுத்து வந்த சக்கரவர்த்தி ஜோவியன் நல்ல கிறீஸ்துவராகவும் கிறீஸ்துவர்களின் ஆதரவாளராகவும் இருந்தார். அடுத்த சில வருடங்கள், கிரகோரியார்,கப்பதோசிய பிராந்தியத்தை பிளவுபடுத்துவதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆரிய பதிதத் தப்பறைக்கு எதிராகப் போராடுவதில்  ஈடுபட்டார். இந்த பதற்றமான சூழலில்,  இவர் தனது நண்பரான அர்ச்.மகா பேசிலுடன் சேர்ந்து கொண்டு, ஆரிய பதிததர்களை செசரையா தேவாலயத்தில் நிகழ்ந்த  வேத இயலிலும் சொல் இலக்கணத்திலும் வாதிட்டு  வென்றார். பகிரங்கமாக நடத்தப்பட்ட இவ்விவாதத்தை சக்கரவர்த்தி வாலென்ஸின் பிரதிநிதிகள் தலைமைதாங்கியிருந்தபோது, அர்ச்.பேசிலும், அர்ச்.கிரகோரியாரும் பதிதர்களை விவாதத்தில் வாதிட்டுத் தோற்கடித்து வெற்றிபெற்றனர். இதன் பின், இவ்விரு அர்ச்சிஷ்டவர்களுடைய எதிர்காலமும், திருச்சபையை நிர்வகிப்பதற்கான அலுவலில் அர்ப்பணிக்கப்பட வேண்டியதாயிருந்தது! இவர்களுடைய எதிர்காலத்தை நோக்கி திருச்சபையின் சீரான நிர்வாக அலுவல்கள் காத்திருந்தன!

380ம் வருடம் புதிய சக்கரவர்த்தியாக, தியோடோசியுஸ் வந்தபோது, கான்ஸ்டான்டிநோபிளின் ஆரிய பதிதத்தைச் சேர்ந்த மேற்றிராணியாரான டெமோஃபிலியுஸ் பதவி நீக்கம் பெற்றார்; அப்பதவியில் அர்ச்.கிரகோரியார்  மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப்பட்டார்;  கான்ஸ்டான்டி நோபிள் மேற்றிராசனத்தை மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார்; பின்னர்,இளைப்பாறும்படியாக, நசியான்ஸிற்குச் சென்று ஏகாந்தத்தில் ஜெப தப பரிகார ஜீவியம் ஜீவித்தார்; இவர் தனது 64ம் வயதில் 389ம் வருடம் பாக்கியமாய் மரித்தார்.🌹✝

“எல்லா ஞானஸ்நானம் பெற்ற கிறீஸ்துவர்களிடத்திலும் இந்த மூன்று காரியங்களை சர்வேசுரன் கேட்கிறார்: இருதயத்தில் மிகச் சரியான விசுவாசம்; நாவில் எப்போதும் உண்மை; சரீரத்தில் அடக்கவொடுக்கம் ஆகிய மூன்றும்  ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்துவனிடமும் இருக்க வேண்டும்” அர்ச்.நசியான்சென் கிரகோரியார்.


🌹அர்ச். நசியான்சென் கிரகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!🌹


🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹

செவ்வாய், 7 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 28 - அர்ச். ஸ்தனிஸ்லாஸ் (St. Stanislaus - May 7)

 ⭐இன்றைய அர்ச்சிஷ்டவர்⭐ 

 மே 0️⃣7️⃣ம் தேதி

🌹ஸ்துதியரும் மேற்றிராணியாரும் வேதசாட்சியுமான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் திருநாள்🌹




🌹இவர் போலநது நாட்டில், ஸெப்பானோவ் என்ற நகரில் 1030ம் வருடம் பிறந்தார். துவக்கக் கல்வியை போலந்து நாட்டில் கற்றபிறகு, பாரீஸ் நகரில் உயர்கல்வியை முடித்து, குருப்பட்டம் பெற்றார். கிராகோ நகர மேற்றிராணியார் 1072ம் வருடம் இறந்த பிறகு, அர்ச்.ஸ்தனிஸ்லாஸை ஒரு மனதாக அந்நகரின் அடுத்த மேற்றிராணியாராகத் தேர்ந்தெடுத்தனர்.  அச்சமயம் அப்பதவியை இவர் மறுத்து வந்தார்;  அப்போது பாப்பரசராக இருந்த 2ம் அலெக்சாண்டரின் நேரடிக் கட்டளை வந்தபிறகே, மேற்றிராணியார் பதவியை அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் ஏற்றுக் கொண்டார்.

போலந்து நாட்டின் அரசனான 2ம்போலஸ்லாசுடன் இவருக்கு ஏற்பட்ட முதல் முரண்பாடு, ஒரு நிலத்தகராறின்போது, துவங்கியது. மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸ் தனது மேற்றிராசனத்திற்காக விஸ்டுலா நதியின் கரையில் லுப்லின் நகருக்கு அருகில் பியோடர் என்பவரிடமிருந்து, சிறிதளவு நிலத்தை வாங்கியிருந்தார். பியோடர் இறந்தபிறகு, அந்த நிலத்தை அவருடைய குடும்பத்தினர் அந்த நிலத்தின் மீது உரிமை கொண்டாடி வழக்கு தொடுத்தனர். இதில், அரசன், மேற்றிராணியாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினான். 

இதற்குத் தேவையான சாட்சியை, அதாவது, தான் நிலத்தை வாங்கிய பியோடரையேக் கூட்டி வருவதற்கு, அர்ச்சிஷ்ட மேற்றிராணியார் அரசனிடம் மூன்று நாள் அவகாசம் கேட்டார்! உடனே, இறந்தவனைக் கூட்டி வருவதாக, மேற்றிராணியார் கேட்கும் இந்த அபத்தமான விண்ணப்பத்தின் பேரில், அரசனும், அவனுடைய அவையிலிருந்தவர்களும் கேலி செய்து நகைத்தனர்; இருப்பினும், அரசன் அதற்கு சம்மதித்து மூன்று நாள் அவகாசம் கொடுத்தான்.

மூன்று நாட்களுக்குப் பின், அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், பியோடருக்கு மறுபடியும் உயிர் கொடுத்து, போலஸ்லாஸ் அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். அதைக்கண்ட அரசனும் அவனுடைய அவையிலிருந்தவர்களும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போயினர்! பியோடர், தன் மூன்று மகன்களையும் கடிந்து கொண்டார்; பின் அரசனிடம், பியோடர், மேற்றிராணியார் உண்மையாகவே தன் நிலத்தைத் தன்னிடமிருந்து,, விலைக்கு வாங்கியிருந்தார், என்ற வாக்குமூலத்தை அளித்தார். அரசனும் வேறுவழியில்லாமல், மேற்றிராணியாருக்கு எதிரான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தான். பின் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், தேவ உதவியால், புதுமையாக கல்லறையிலிருந்து உயிருடன் எழுப்பி தன்னுடன் கூட்டி வந்திருந்த, பியோடரிடம் இன்னும் கொஞ்சம் காலம் உயிருடனிருப்பதற்கு ஆசையிருந்தால், வாழலாம், என்று கூறினார். பியோடர், “ஆண்டகையே! வேண்டாம்! என்னை திரும்பவும் கல்லறையிலேயே விட்டு விடுங்கள்”  என்று கூறினார். அதன்படி, அவரை கல்லறைக் குழியினுள் கிடத்தியவுடன், அவருடைய சரீரம், மறுபடியும் எலும்புக்கூடாக மாறியது; கல்லறையில் மறுபடியும் அவரை அடக்கம் செய்தனர்.

அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், அரசனுடைய ஒழுக்கக் கேட்டைக் குறித்து, அவனைக் கண்டித்து, திருச்சபை விலக்கம் செய்தபோது, மிகப் பெரிய முக்கியமான முரண்பாடு அரசனுடன் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அரசன் மூர்க்க வெறிகொண்டவனாக, தனது காவலர்களை, மேற்றிராணியாரான அர்ச். ஸ்தனிஸ்லாஸை கொல்வதற்காக, அனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள், அர்ச்சிஷ்டவரைத் தொடுவதற்கு துணியாமலிருந்தனர். இதைக் கண்ட அரசன் தனது சொந்த கரங்களினாலே, அர்ச்சிஷ்டவரைக் கொன்றான். 1079ம் வரும் அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் திவ்யபலிபூசை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அரசன் அவரை நெருங்கிச் சென்று, தன் வாளால் அவருடைய தலையை வெட்டிக் கொன்றான். கிராகோ நகர மேற்றிராணியாரான அர்ச்.ஸ்தனிஸ்லாஸ் இவ்விதமாக மகிமைமிகு வேதசாட்சிய முடியைப் பெற்றுக் கொண்டார்.

போலஸ்லாஸ் அரசன், செய்த இக்கொலை, போலந்து நாடுமுழுவுதும், அவனுக்கு எதிராகக் கலகம் ஏற்படுவதற்குக் காரணமாயிற்று: அதனால், அவன் அரசபதவியிலிருந்து அகற்றப்பட்டான். நாட்டு மக்களிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹங்கேரி நாட்டில் தஞ்சம் அடைந்தான்.  இவனுக்குப் பிறகு, இவனுடைய சகோதரன் முதலாம் விலாடிஸ்லாஸ் ஹெர்மன் போலந்து நாட்டின் அரச பதவியிலமர்ந்தான். அர்ச்.ஸ்தனிஸ்லாஸ், 4ம் இன்னசென்ட் பாப்பரசரால், அசிசி நகரில், 1253ம் வருடம் அர்ச்சிஷ்டவராக பீடத்திற்கு உயர்த்தப்பட்டார். 🌹✝


🌹அர்ச்.ஸ்தனிஸ்லாஸே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!🌹



--


🇻🇦

May 0️⃣7️⃣


Martyrdom 🌟🌹

ST. STANISLAUS

Stanislaus was born in AD 1030 at Szczepanów, in Poland. After initial studies in Poland, he completed his education in Paris, and was ordained a priest.

When the bishop of Cracow died in 1072, Stanislaus was unanimously elected as his successor, but accepted the office only at the explicit command of Pope Alexander II.

The first conflict of Bishop Stanislaus with King Bolesław of Poland was over a land dispute. The Bishop had purchased for the diocese a piece of land on the banks of the Vistula River near Lublin from a man named Piotr, but after Piotr's death the land had been claimed by his family. The king gave the verdict against Stanislaus.

Bishop Stanislaus asked the King for three days to produce his witness, Piotr himself. The King and his court laughed at the absurd request, but granted Stanislaus the three days.

After 3 days Stanislaus brought Piotr back to life & brought him  before King Bolesław. The dumbfounded court heard Piotr reprimand his three sons and testify that Stanislaus had indeed paid for the land. Unable to give any other verdict, the King dismissed the suit against Bishop Stanislaus.

A more substantial conflict with King Bolesław arose after Stanislaus criticized the King for his immorality &  excommunicated him.

King Bolesław was furious and sent his guards to kill Bishop Stanislaus, but when the guards didn't dare to touch the Bishop, the King killed him with his own hands by striking Stanislaus on the head with a sword while Mass was being celebrated in the year 1079.

The murder stirred outrage throughout Poland and led to the dethronement of King Bolesław II, who had to seek refuge in Hungary and was succeeded by his brother, Władysław I Herman.

St. Stanislaus was canonized in 1253 by Pope Innocent IV at Assisi.





🔵




ஞாயிறு, 5 மே, 2024

அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம் 27 - அர்ச். ஐந்தாம் பத்திநாதர் St. Pius V

மே 0️⃣5️⃣ம் தேதி 

🌹அர்ச்.ஐந்தாம் பத்திநாதர் பாப்பரசர் திருநாள்🌹



🌹மிக்கேல் கில்சியேரி கி.பி.1504ம் வருடம் இத்தாலியிலுள்ள லொம்பார்டி மாகாணத்தில், போஸ்கோ என்ற நகரில் பிறந்தார். இவர் ஆடுமாடு மேய்ப்பவராக 14வது வயது வரை வேலைபார்த்தார். 14வது வயதில், அர்ச்.சாமிநாத சபையைச் சேர்ந்த இரண்டு குருக்கள் இவரைச் சந்தித்தனர்; இவருடைய புண்ணியங்களையும், புத்திசாலிதனத்தையும் கண்டறிந்தனர்; இவரும், அர்ச்.சாமிநாத சபை மடத்தில் சேர்ந்து, 24வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பின் 16 வருட காலமாக தத்துவ இயலும் வேத இயலும் கற்பித்து வந்தார்.  பின் சூத்ரி என்ற இடத்தின் மேற்றிராணியாராக 1556ம் வருடம் அபிஷேகம் செய்யப்பட்டார். பின் மிலான் நகரில், திருச்சபையின் சத்திய போதனைகளுக்கு எதிராக பதிதத் தப்பறைகளைத் தோற்றுவிக்கும் பதிதர்களை விசாரிப்பதற்கான நீதிவிசாரணையாளரின் பதவிபொறுப்பில், அமர்த்தப்பட்டார். பின்னர் திருச்சபையின் பொது தலைமை நீதிவிசாரணையாளராக அலுவல் புரிந்தார். பின், 1557ம் வருடம் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர் சென்ற இடங்களிலெல்லாம், மிகக் கடுமையாக  பதிதத்தையும், ஊழலையும் எதிர்த்துப் போரிட்டார்.
1566ம் வருடம் ஜனவரி 7ம் தேதியன்று, இவர் பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணியில் முக்கிய காரணமாக, இவருடைய இளம் நண்பரும் திருச்சபையின் மாபெரும் வேதபாரகருமான அர்ச்.சார்லஸ் பொரோமேயோ இருந்தார். பாப்பரசரானதும், இவர் தனது பெயரை ஐந்தாம் பத்திநாதர் என்று வைத்துக் கொண்டார்.
கிறீஸ்துவ நல்லொழுக்கத்தில் விசுவாசிகளை உயர்த்துவதின் மட்டிலும், குருக்களை சீர்திருத்துவதின் மட்டிலும், மிக உறுதியாக அன்னிய நாடுகளில் வேதபோதக அலுவல்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஆதரவின் மட்டிலும், மாபெரும் திருச்சபையின் சங்கமான திரிதெந்தீன் பொதுச்சங்கம்  கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றுகிறதில் இவருடைய ஆட்சிகாலம் செலவழிக்கப்பட்டது. இவருடைய ஆட்சியின் காலத்தில் திரிதெந்தீன் சங்கத்தின் ஞான உபதேசம் முழுவதுமாக இயற்றப்பட்டது.  குருக்களுக்கான உரோமன் கட்டளை ஜெபப்புத்தகமும், திவ்யபலிபூசை புத்தகமும்  மறுபரிசீலனை செய்து திருத்தியமைக்கப்பட்டது; பாரம்பரிய திரிதெந்தீன் இலத்தீன் திவ்ய பலிபூசை இவருடைய காலத்தில் தொகுக்கப்பட்டு, நித்திய காலத்திற்குமாக செல்லுபடியாகிறதும், இதைத் தவிர வேறு எந்த முறையிலும் செய்யமுடியாததுமாக உண்மையான திவ்ய பலிபூசையின் நித்திய சட்டத்தை  “Quo Primum”  என்கிற ஓர் ஆணை மடலை தனது தவறா வரத்தினால் நித்தியத்திற்குமாக அர்ச்.ஐந்தாம் பத்திநாதர் பாப்பரசர் பிரகடனம் செய்தார்.
இவருடைய ஆறு வருட ஆட்சி காலத்தில் இடைவிடாமல் இரண்டு மாபெரும் எதிரிகளுடன் போரிட நேர்ந்தது. ஐரோப்பா முழுவதும் பதிதத் தப்பறையைப் பரப்பி வந்த புராட்டஸ்டன்டுகளும், கிழக்கிலிருந்து ஐரோப்பாவை ஆக்கிரமிக்க போரிட வந்த மகமதியர்களும் தான், அந்த இரண்டு எதிரிகள்.
அர்ச்.ஐந்தாம் பத்திநாதர், தெளிவான கத்தோலிக்க ஞான உபதேசத்தினாலும், பிரசங்கங்களாலும், கத்தோலிக்க வேதசத்தியங்கள் பற்றிய மிகச்சரியான விளக்கங்களாலும், புராட்டஸ்டன்டுகளை எதிர்த்துப் போராடினார். இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசியை இவர் திருச்சபை நீக்கம் செய்தார்;  அரசியால் இங்கிலாந்திலும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் அரசர்களாலும் துன்ப உபத்திரவப்படுத்தப்பட்ட  கத்தோலிக்கர்களுக்கு, பாப்பரசர் ஆதரவளித்தார்.
அரசியல் களத்தில், அர்ச்.ஐந்தாம் பத்திநாதர், எல்லைமீறி படையெடுத்த மகமதியர்களின் படைகளுக்கு எதிராக,  ஐரோப்பாவின் எல்லா கத்தோலிக்க இராணுவப் படைகளையும் ஒன்றிணைக்க மிகக் கடுமையாக பாடுபட்டார்.1571ம் வருடம், அக்டோபர் 7ம் தேதியன்று, லெப்பான்டோவில் நிகழ்ந்த போரிலே மாபெரும் துருக்கிய படைக்கு எதிராக, கத்தோலி்க்கர்கள், மகா பரிசுத்த ஜெபமாலையால், புதுமையாக அடைந்த மாபெரும் வெற்றியே, இவருடைய ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மிகப் பிரபலமான வெற்றியாகும்!
   உரோமாபுரியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் மத்தியத் தரைக் கடலில் வந்த மகமதியர்களின் மாபெரும் கப்பற்படையை எதிர்கொள்வதற்காக பாப்பரசர் அர்ச்.ஐந்தாம் பத்திநாதர், ஒரு சிறு கத்தோலிக்கக் கப்பற்படையை அனுப்பி வைத்தார். அதே சமயம், பாப்பரசர், கத்தோலிக்கப் படையிலிருந்த ஒவ்வொரு கத்தோலிக்கரும் தினமும் திவ்யபலிபூசை கண்டு திவ்ய நன்மை உட்கொள்ளவேண்டும் என்றும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார். மேலும், பாப்பரசர், ஐரோப்பியர்கள் அனைவருக்கும், போரில் கத்தோலிக்கர்கள் வெற்றிபெறும்படியாக, ஜெபமாலை ஜெபிக்கவும், உரோமாபுரியில் தேவாலயங்களில் மகா பரிசுத்த தேவநற்கருணைக்கு தோத்திரமாகவும் நிந்தைப் பரிகாரமாகவும், ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  40 மணி நேர  ஆராதனைக்கு வரும்படியும் ,அழைப்பு விடுத்தார். மகா பரிசுத்த தேவமாதாவின் புதுமையால், கத்தோலிக்கர்களின் கப்பற்படை, மாபெரும் துருக்கிய கப்பற்படையை லெப்பான்டோ என்ற இடத்தில் அழித்து, தோற்கடித்தது!
மகா பரிசுத்த தேவமாதாவின் ஜெபமாலையால் புதுமையாக கத்தோலிக்கர்களின் கப்பற்படை அடைந்த இவ்வெற்றியின் ஞாபகார்த்தமாக அர்ச்.5ம் பத்திநாதர் பாப்பரசர், அக்டோபர் 7ம் தேதியன்று, மகா பரிசுத்த ஜெபமாலை மாதா திருநாளை அனுசரிக்கும்படி பிரகடனம் செய்தார்.  மேலும், பாப்பரசர், மகா பரிசுத்த தேவமாதாவின் பிரார்த்தனையில், கிறீஸ்துவர்களின் சகாயமான மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்! என்கிற மன்றாட்டையும்  சேர்த்தார். 
அர்ச்.5ம் பத்திநாதர், ஜெபமாலையின் பாப்பரசர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் 1572ம் வருடம் மே 1ம் தேதியன்று ஓ! “ஆண்டவரே! என்துன்பங்களையும், பொறுமையையும் அதிகரித்தருளும்” என்று உச்சரித்தபடி,பாக்கியமாய் மரித்தார்.  உரோமையிலுள்ள மகா பரிசுத்த தேவமாதாவின் பெரிய பசிலிக்கா தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.🌹✝️

🌹What is Ex Cathedra ⁉ அதாவது பாப்பரசரின் தவறா வரம்! என்றால் என்ன?🌹 பாப்பரசர் தவறா வரத்துடன் எதையாவது வரையறுத்துக் கூறும் போது, நமதாண்டவர் தாமே, “உங்களுக்கு செவி கொடுக்கிறவன், எனக்கு செவி கொடுக்கிறான்! (லூக் 10:16)” என்று  உன்னத ஆடம்பரமான விதமாகக் கூறுகின்றார். நமதாண்டவர் பேசும்போது, சத்தியத்தில் ஒருபோதும் எந்த முரண்பாடும் இருக்கக் கூடாததைப் போல்,அவர் ஒருபோதும் முரண்பாடாக எதுவும் கூறமாட்டார்!

பாரம்பரிய இலத்தீன் திவ்யபலிபூசையைப் பற்றி, அர்ச்.5ம் பத்திநாதர் பாப்பரசர், தனது தவறா வரத்தினால், 1570ம் வருடம் ஜுலை 19ம் தேதியன்று, பிரகடனம் செய்த “Quo primum”  , “கோ பிரிமம்” என்ற ஆணை மடல்:
நித்திய காலத்திற்குமாக செல்லுபடியாகிற இந்த நமது ஆணையினால், இந்த திவ்ய பலிபூசை புத்தகத்தில் ஒருபோதும் எதுவும் சேர்க்கப்படவோ, எதுவும் நீக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது, என்று நாம் தீர்மானித்துக் கட்டளையிடுகிறோம்! இனி வரும் எதிர்காலத்தில் எச்சமயத்திலும், ஒரு குருவோ, மேற்றிராசன குருவோ, அல்லது துறவற சபைக்குருவோ, வேறு எவ்விதத்திலும் திவ்யபலிபூசையை நிறைவேற்றும்படி நிர்ப்பந்திக்கக் கூடாதவராக இருக்கிறார்!  மனச்சாட்சியினுடைய உறுத்தல்களையும், திருச்சபையின் தண்டனைகள் மற்றும் கண்டனங்கள் மட்டிலான பயத்தையும் ஒரேயடியாக தவிர்க்கும்படியாக, நாம் நம் அப்போஸ்தல அதிகாரத்தைக் கொண்டு, இந்த பூசையின் இப்போதைய ஒழுங்குமுறையின் மட்டில் நாம் ஆணையிட்டு தீர்மானிக்கிறோம் என்பதையும், இந்த நமது ஆணை, நித்திய காலத்திற்கும் நீடித்திருக்கும் என்பதையும், இது ஒருபோதும், ஏதாவது எதிர்காலத்தின் ஒரு தேதியில், சட்டபூர்வமாக ரத்து செய்யப்படவோ, திருத்தி அமைக்கப்படவோ கூடாது  என்பதையும் , நாம் பிரகடனம் செய்கிறோம். எல்லா காலத்திற்குமாக அளிக்கப்பட்ட இந்த நமது ஆணையின் கட்டளைக்கு எதிராக, யாராவது எப்போதாவது, ஏதாகிலும் ஒரு செயலில் ஈடுபட துணிந்தால்,  அவன் எல்லாம் வல்ல சர்வேசுரனுடையவும், அப்போஸ்தலர்களான முத்திப்பேறுபெற்ற இராயப்பருடையவும், முத்திப்பேறுபெற்ற சின்னப்பருடையவும், சாபத்திற்கு உள்ளாவான் என்பதை அறிந்து கொள்வானாக!” 
ஆகவே, அர்ச். 5ம் பத்திநாதர் பாப்பரசரின் இத்தவறா வரத்தின் காரணமாகத் தான், பாரம்பரிய இலத்தீன் திவ்யபலிபூசை நித்தியத்திற்குமாக நிரந்தர சட்டத்தினுள் நிலைத்திருக்கிறது! 

அப்படியென்றால், புதுப்பூசை என்று அழைக்கப்படுகிற வேறு எந்த பூசையும், பாரம்பரிய திரிதெந்தீன் இலத்தீன் திவ்யபலிபூசைக்கு  மாற்று ஆகவும் பதிலாகவும் நிறைவேற்றப்படக் கூடாததாக இருக்கிறது, என்பதை கத்தோலிக்கர்களாகிய நாம் அனைவரும் அறிந்து கொள்வோமாக! 
அவையெல்லாம் செல்லுபடியாகாத பதிதத் தப்பறையானதும் தேவ நிந்தனையானதுமான பூசைகளாகும்!  

🌹திவ்யபலிபூசைக்கு நித்தியச் சட்டத்தை அளித்துப் பாரம்பரிய கத்தோலிக்க விசுவாசத்தைப் பாதுகாத்த மாபெரும் பரிசுத்த பாப்பரசரே! அர்ச்.ஐந்தாம் பத்திநாதரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!    🌹

🌹அர்ச்.அமலோற்பவ மாமரியே! வாழ்க!🌹